Homeவெளிநாடுஅமெரிக்காநாசா விண்வெளி வீரர்களுக்கு கூடுதல் ஊதியம் இல்லை!

நாசா விண்வெளி வீரர்களுக்கு கூடுதல் ஊதியம் இல்லை!

நாசாவைச் சேர்ந்த இரு விண்வெளி வீரர்கள், தங்கள் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் 278 கூடுதல் நாட்கள் தங்கியிருந்தனர். ஆனால், அவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்படவில்லை.

நீட்ஹாம் பகுதியைச் சேர்ந்த சுனி வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் இவ்வாரம் பூமிக்கு திரும்பினர். அவர்களது பயணம் 8 நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அவர்கள் 9 மாதங்கள் விண்வெளியில் இருந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அவர்கள் விண்வெளியில் இழந்த நேரத்திற்கு ஈடு செய்வேன். தேவைப்பட்டால், எனது சொந்த பணத்தில் இருந்து செலுத்துவேன். அதை நான் பார்த்துக்கொள்வேன். எனக்கு அது பிடித்திருக்கிறது,” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விண்வெளியில் இருக்கும் போது, நாசா விண்வெளி வீரர்கள் மத்திய அரசு ஊழியர்களாக உத்தியோகபூர்வ பயண உத்தரவுகளின் கீழ் செயல்படுவதால், வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோருக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் கூடுதல் ஊதியம், விடுமுறை அல்லது வார இறுதி ஊதியம் வழங்கப்படவில்லை.

நாசாவின் தகவலின்படி, விண்வெளி வீரர்களுக்கு ஆண்டுக்கு 152,000 டொலர்களுக்கு சற்று அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் 286 நாட்களுக்கு தினமும் 5 டொலர் வீதம் பயணப்படியாக மொத்தம் 1,430 டொலர் கூடுதல் ஊதியமாக பெற்றனர்.

RELATED ARTICLES

Most Popular